மக்கள் விருப்பத்துக்கு மாறாக மாற்றப்பட்ட நிதி ஒதுக்கீடு: முல்லைத்தீவில் போராட்டம்
வீதி திருத்தப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்கள் விருப்பத்துக்கு மாறாக மாற்றியதை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த போராட்டம் நேற்றையதினம் (19.02.2024) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திககாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 115 மில்லியன் ரூபா நிதியில் 22.5 மில்லியன் ரூபா புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நிதியினை என்னென்ன தேவைக்கு பயன்படுத்துவது என கிராமங்களில் மக்கள் மற்றும் பொது அமைப்புக்களை இணைத்து கலந்துரையாடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்ப்பு
அத்துடன், மக்களால் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் குறித்த நிதி வேறு தேவைக்காக மாற்றப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனாலேயே, புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









