கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்...! முடக்கப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்து: பலர் கைது
கொழும்பில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார நுகர்வோர் சங்கம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அத்துடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - திவுலப்பிட்டி பிரதான வீதி ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் மற்றும் பௌத்த பிக்கு உட்பட 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் கைது
பேரணியின் ஆரம்பத்தில் பேரணியை நடத்தக் கூடாது என பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், கலவரமாக நடந்து கொண்ட மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட குழுவினரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தற்போது திவுலபிட்டிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
