சாட்சியமளித்துள்ள பிரியந்த வீரசூரிய: டிரான் அலஸ் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின், குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் முன், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சாட்சியமளித்துள்ளார்.
நேற்று இந்த சாட்சியம் பதிவாகியுள்ளது.
வெலிகம விருந்தக துப்பாக்கிச்சூடு
விசாரணையின் முக்கிய விடயமாக, வெலிகம விருந்தக துப்பாக்கிச்சூடு தொடர்பில், தென்னகோனுக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டு அமைந்திருந்தது.
இந்த நிலையில், இந்த சம்பவம், பொலிஸ் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கடுமையாக பாதித்துள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர் விசாரணைகள்
அதேநேரம், ஆதாரங்கள் சிதைக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன, அங்கீகரிக்கப்படாத பதவி உயர்வுகள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் பொதுப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் டிரான் அலஸ் இந்த நடவடிக்கைகள் பற்றி அறிந்திருந்தார் என்பதையும், பதில் பொலிஸ் அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
