இந்தியாவின் முக்கிய தொடர்பை கொண்டுள்ள இலங்கையின் பிரதமர்
இலங்கையின் புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய இந்தியாவுடன் பழைய தொடர்புகளைக் கொண்டவர் என்று அறியப்படுகிறது.
கல்வியாளர், அரசியல்வாதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது பிரதமராக கடந்த செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டார்.
இதன் மூலம், 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பொறுப்பை ஏற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும், இலங்கை வரலாற்றில் இத்தகைய பதவியை வகிக்கும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
கல்வி வாழ்க்கையின் பெரும்பகுதி
பிரதம மந்திரி பதவியை தவிர நீதி, கைத்தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல துறைகளும் அமரசூரியவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தற்போது 54 வயதாகும் அமரசூரியா, 1991-1994 க்கு இடையில் டில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த தனது கல்வி வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவில் கழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் தலைசிறந்த ஆளுமைகளை உருவாக்கும் கல்வி நிறுவனமான இந்துக் கல்லூரியிலேயே அவர் தமது கல்வி கற்றார்.
இது குறித்து டில்லி இந்துக் கல்லூரியின் முதல்வர் அஞ்சு ஸ்ரீவஸ்தவா கருத்துரைத்துள்ளார். இந்து கல்லூரியில் படித்த ஒருவர் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றதை அறிந்து கொள்வதில் பெருமையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri