சஜித் பிரதமராக பதவியேற்க தயாரெனில் ஆதரவு: ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பகிரங்க அறிவிப்பு
சஜித் பிரதமராக பதவியேற்க தயாரெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாடாளுமன்ற சுயாதீன அணி ஆதரவளிக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று மகாசங்கத்தினருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்கத் தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியும் தயாராக உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri