ஜனாதிபதி தேர்தல் காலம் தாழ்த்தப்படாது: ருவான் விஜேவர்தன
ஜனாதிபதித் தேர்தல் காலம் தாழ்த்தப்படாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தவிசாளர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணையில் தேர்தலை காலம் தாழ்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் பின்னணியில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிப்பதாக வெளிக்காட்டிக் கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
ரணில் விக்ரமசிங்க அரசியல் சாசனத்தை மதிக்கும் ஒர் அரசியல்வாதி என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
