ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும்! சிசிர ஜயகொடி
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் என உள்நாட்டு மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது எனவும், நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெஹலியகொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை எனவும், ஜனநாயக நாட்டில் தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது எனவம் அவர் தெரிவித்துள்ளார்.
முடிந்தளவு விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என அவர் குிறப்பிட்டுள்ளார்.
முதலில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 6 மணி நேரம் முன்
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam