இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி அநுர : சஜித் சாடல்
ஆட்சிக்கு வர முன்னர் ஒரு கதையும் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு கதையையும் ஜனாதிபதிக் கூறிக்கொண்டிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “அநுரகுமார திஸாநாயக்க எனும் ஜனாதிபதி வேட்பாளருக்கும், அநுரகுமார திஸாநாயக்க என்ற ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இதனால் நாட்டு மக்கள் இன்று நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளார்கள்.
6 மாதங்களுக்கு ஒரு தடவை
ஜனாதிபதி தேர்தல் மேடையில் அவர் என்ன கூறினார். 6 மாதங்களுக்கு ஒரு தடவை அரச உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தை உயர்த்துவதாகக் கூறினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதாகக் கூறினார்.

மின்கட்டணம், நீர்க்கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறினார். கடவுச்சீட்டு வரிசையை இல்லாதொழிப்பதாகக் கூறினார்.
இவ்வாறு கூறிய ஒரு வாக்குறுதியையேனும் ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளாரா?
இரட்டை அரசியல்
இதிலிருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் இரட்டை நாக்கு அரசியல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாக்கு எடுக்க ஒரு கதையும் வாக்கு எடுத்து அதிகாரத்திற்கு வந்தவுடன் இன்னொரு செயற்பாட்டையும்தான் ஜனாதிபதி செய்து வருகிறார்.
ஐ.எம்.எப். இற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி, இன்று ஐ.எம்.எப். இன் கைப்பாவையாக மாறியுள்ளார்” என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan