பிரதேச சபை சாரதி மீது வாள்வெட்டு: முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவு முறுகண்டி பகுதியில் கடமையில் இருந்த பிரதேச சபை சாரதி ஒருவர் மீது குறிப்பிட்ட சிலர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று காலை(12.12.2022) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள ஒலுமடு உப அலுவலகத்தில் பணியாற்றும் உழவு இயந்திரத்தின் சாரதியே வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அடையாளம்தெரியாத மூவர் கொண்ட குழு
மந்துவில் பகுதியில் வசித்துவரும் பிரதேச சபையில் பணியாற்றும் 32 வயதுடைய சாரதியான அன்ரன் பரமதாஸ் துசான் என்ற ஊழியரே வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முறுகண்டி பகுதியில் பிரதேச சபையின் கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது வந்த அடையாளம்தெரியாத மூவர் கொண்ட குழுவினர் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
