எதிர்வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு விபரம் வெளியானது
எதிர்வரும் இரு தினங்களுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்களில், பகலில் ஒரு மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய வலயங்களில் குறித்த காலப்பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.