மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய மின்வெட்டு: உண்மையான பின்னணி என்ன!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தடை பிரச்சினை பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிலிருந்து பேசுபொருளாகியுள்ள இலங்கையின் மின்வெட்டு விவகாரம், அநுர அரசாங்கத்திற்கு ஒரு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.
மின்விநியோகம் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள இந்த திடீர் நடவடிக்கை, மக்கள் மத்தியில், பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், நேற்றைய மின்வெட்டு சம்பவத்திற்கும் அதானியின் காற்றாலை மின்பிறப்பாக்கி திட்டத்திற்கும் தொடர்பு இருக்குமா என்னும் கேள்வியும் எழுகின்றது.
இவை அனைத்தையும் தெளிவுபடுத்தும் வகையிலோ எழும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலோ இதுவரை அரசாங்கம் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை.
இச்சம்பவம் குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தாமையே மேலும் மக்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றது.
இவ்விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது ஐபிசி ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri