பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பம்
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனைக் கிளையின் செயலாளருமான வைத்தியர் உவைஸ் பாறுக் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வைத்திய சேவையை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் நிதின் ரணவக்கவுடன் இணைந்து தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக அம்பாறை, மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டொக்டர் தனுஷியா சிவலிங்கம் வாரத்தில் இரு தினங்கள் பொத்துவில் வைத்தியசாலைக்கு வருகை தந்து சேவையாற்றுவதற்கு முன் வந்துள்ளார்.
உதவி ஒத்துழைப்பு
கடந்த (2025.07.15) ஆம் திகதி முதல் சிறு பிள்ளைகளுக்கான விசேட வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் வாரத்தில் இரு தினங்கள் இந்த சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் காலங்களில் ஏனைய விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளும் இந்த பிரதேச மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும்.
அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அந்த வகையில் எமது கோரிக்கைகளை ஏற்று எமது பிரதேச மக்களுக்காக சேவையாற்றுவதற்கு முன்வந்த சிறுபிள்ளை வைத்திய நிபுணர் தனுஷியா சிவலிங்கம் மற்றும் அற்காக உதவி ஒத்துழைப்புக்களை வழங்கிய அம்பாறை, மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சந்திரசேன, வைத்திய அத்தியட்சகர் நிதின் ரணவக்க ஆகியோருக்கு பொத்துவில் பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நிலாவின் அப்பா சோழனிடம் போட்ட சவால், குடும்பம் உடைந்துவிடுமா.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
