செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் மீட்கப்பட்ட என்புக்கூடு
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளின் போது நேற்று வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றைச் சுத்தம் செய்யும் பணிகள் நேற்றையதினம்(5) முன்னெடுக்கப்பட்டன.
மனித என்புக் கூட்டுத் தொகுதி
இதன்போது, அவற்றுள் ஒரு மனித என்புக் கூட்டுத் தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் தெளிவான விளக்கத்தைப் பெற யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை மூத்த விரிவுரையாளர் புதைகுழிப் பகுதிக்கு அழைக்கப்பட்டு, அது தொடர்பான அவரது அவதானிப்புகள், விளக்கங்கள் கோரப்பட்டன.
அவர் தனது அவதானிப்பின்படி, மேற்படி மனித என்புத் தொகுதி இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்புக்கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்புக்கூடு இல்லை எனவும் தெரிவித்தார்.
அதையடுத்து அது தொடர்பிலான விவரமான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ். மேலதிக நீதிவான் செ.லெனின்குமார் உத்தரவிட்டார்.
அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழிக்காக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதித்த 45 நாள்கள் நாளை சனிக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், அடுத்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் நாளை நீதிவான் திகதியிடுவார் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
மேலதிக தகவல் - தீபன்





மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
