முறைப்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வரும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு 60,000க்கும் அதிகமான முறைப்பாடு கிடைத்துவருவதாகவும், மேலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை கையாள்வது திணைக்களத்துக்கு கடினமாக இருப்பதால் இந்த பரிசீலனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முறைப்பாடுகளின் எண்ணிக்கை
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மீதான சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில், சில முறைப்பாடுகளை பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு (CCIB) பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

எந்தவொரு விசாரணையையும் அல்லது சோதனையையும் நடத்த மத்திய குற்ற புலனாய்வு பணியகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர், நாட்டில் திறமையான விசாரணை செயல்முறையை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri