மன்னாரில் காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையம் பூட்டு
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிராக கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையை அடுத்து குறித்த விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று(27.02.2026) மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போதே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீல் வைக்கப்பட்ட வியாபார நிலையம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த விற்பனை நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காட்சி படுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையிலும் அழுகிய பழங்கள், மரக்கறிகள் விற்பனைக்காக வைத்திருந்த தன் அடிப்படையிலும், களஞ்சிய சாலை சுகாதாரமான முறையின் பேணப்படாமையின் அடிப்படையிலும் விற்பனை நிலையத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விற்பனை நிலையத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏனைய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை களஞ்சிய சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
