இவரைக் கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
இரண்டு தேசிய அடையாள அட்டைகளை தயாரிப்பதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஆட்பதிவு திணைக்களம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குற்றப்புலனாய்வு விசாரணை
ஆட்பதிவு திணைக்களம் செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, விசாரணையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர் போலி ஆவணத்தை ஆட்பதிவு திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு - 141/1 வெல்ல வீதியை சேர்ந்த வாவலகே ரஷ்மி நுவன் என்பவர் மீதே குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளன.
சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக அவரின் புகைப்படத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
இந்நிலையில். சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
நிலையத் தளபதி விசேட புலனாய்வுப் பிரிவு III - 071 - 8594915 011-2395371” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam