வடக்கில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைது
வடமாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (13.12) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழு ஒன்று செயற்பட்டு வருகின்றது. அதுபோல வடக்கிலும் அவ்வாறான குழு ஒன்று செயற்பட்டு வந்தது.
சிவப்பு நிற முச்சக்கரவண்டி
அந்தகுழு, வவுனியா நகரப் பகுதியில் இருந்து சிவப்பு நிற முச்சக்கர வணடி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே விழுத்தி விட்டு முச்சக்கர வண்டி ஒன்றை கடத்திச் சென்ற சமபவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யபபட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த முச்சக்கர வண்டிக்கு நீல நிற வர்ணப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு விற்பனை செய்திருந்தமை தெரிய வந்ததையடுத்து முச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், அச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டமை தெரிய வந்துள்ளது.
மீட்பக்கட்ட பொருட்கள்
வவுனியா - உளுக்குளம் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு அவரது தங்க மோதிரத்தை திருடிச் சென்றமை தெரிய வந்துள்ளது.
மேலும், மன்னார் - அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து தங்க மோதிரத்தை திருடச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் சென்றமை என்பனவும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு சந்தேக நபர்களிடம் இருந்தும் முச்சக்கர வண்டி மற்றும் 4 அரைப் பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பல் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளின் பின் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/42901535-4977-4e0d-bbdc-38990f194941/24-675c8fe5cea58.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/11c0ef50-1327-4379-ae39-cfe87bbdeb52/24-675c8fe6bc23a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/527be5eb-3ea3-40da-ba73-49c4fd5508da/24-675c8fe78d21b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3a03605b-99c6-4dd7-9dc6-7685c5f5d51a/24-675c8fe86b689.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/134b7c5e-7d19-4e26-a5a6-935a68b9fafb/24-675c8fe94c4a5.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d83a0295-b5e2-4bc9-a0b1-32ef0f6221a6/24-675c8fea3068e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/99d7451f-604f-44f3-87ff-174c8258e74f/24-675c8feaf308e.webp)