பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 240 லீற்றர் பெட்ரோலுடன் ஒருவர் கைது (photo)
பதுளை- மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டமாறுவை பகுதியில் 240 லீற்றர் பெட்ரோலுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிட்டமாறுவ பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
வியாபார நிலையத்தில் அதிக விலைக்குப் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகின்றது எனப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கொள்கலன்களில் இருந்து மொத்தமாக 240 லீற்றர் பெட்ரோல் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பொருளாதார நெருக்கடி:வெளியீடுகளை நிறுத்திய அரச அச்சு ஊடகம் |