மலேசியாவில் கைதான பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மூவர் குறித்த தகவல்கள் விரைவில்...
மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் மூவர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் உதயகுமார வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நபர்களில், பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவரான 'கஞ்ச்பானி இம்ரானின்' நெருங்கிய சகா ஒருவரும் அடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இவர்கள் மலேசியாவில் எவ்வாறு கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்தான தெளிவான தகவல்கள் இன்று அல்லது நாளைக்குள் வெளிவரக்கூடும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri