ரணிலை பார்வையிட்டாரா பிரதமர் ஹரிணி! வெளிவருமா வைத்தியசாலை CCTV - தொடரும் சர்ச்சை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் ஹரிணி அமரசூரிய சென்று பார்வையிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் குறித்த செய்தி போலியானது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிக்கையொன்றின் மூலமும்,ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமும் உறுதிப்படுத்தியிருந்தார்.
எனினும், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதிவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய ரணில் விக்ரமசிங்கவை சென்று சந்தித்ததாரா இல்லையா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam