ரணிலைச் சந்தித்தாரா ஹரிணி! வைத்தியசாலை சி.சி.ரி.வி. கமராக்களை சோதனை செய்ய அனுமதி
பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றார் என்று சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் தொடர்பான விசாரணைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சி.சி.ரி.வி. கமராக்களைச் சோதனை செய்வதற்கு மாளிகாகந்த நீதிவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதிவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதவான் உத்தரவு
பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திப்பதற்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றார் என்று சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மாளிகாகந்த நீதவானிடம் இன்று( 28) தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சி.சி.ரி.வி. கமராக்களைச் சோதனை செய்ய அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
