ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசைதிருப்ப நடந்த சதி அம்பலம் - சாட்சிகளுக்குக் கொலை மிரட்டல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்ப இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அரசியல்வாதிகள் மேற்கொண்ட அதிர்ச்சியூட்டும் சதித்திட்டங்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றில் அம்பலமாகியுள்ளன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி பின்வரும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி,
சிறைச்சாலை சந்திப்புகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் இருந்தபோது, பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவரை மூன்று முறை சந்தித்துள்ளார். இந்தத் தாக்குதல் ஐ.எஸ். அமைப்பால் மட்டுமே நடத்தப்பட்டது என்ற பிம்பத்தை உருவாக்க இவர்கள் இருவரும் இணைந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.

வவுணதீவு சம்பவம்
வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சஹ்ரான் குழுவினரே செய்த போதிலும், அதனை விடுதலைப்புலிகள் மீது திசைதிருப்பத் திட்டமிட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆயுத விநியோகம்
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதங்களை வழங்கினர் என்று சாட்சியம் ஒன்று கிடைத்துள்ளது.
சாட்சிகளுக்குக் கடும் அச்சுறுத்தல்
இந்தச் சதித்திட்டங்கள் குறித்துத் தகவல் வழங்கும் சாட்சிகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றனர் என்று சி.ஐ.டி. தெரிவித்துள்ளது. சாட்சிகளுக்குப் பணம் மற்றும் வெளிநாட்டுப் பயண ஆசை காட்டப்படுகின்றது.

அதற்கு இணங்காதவர்களை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டுதல் போன்ற செயல்கள் இடம்பெறுகின்றன. தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த இராணுவ அதிகாரி பற்றித் தகவல் வழங்கிய சாட்சி ஒருவர், போலி பேஸ்புக் கணக்கு மூலம் வரவழைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார்.
நீதிவானின் உத்தரவு
இந்தச் சூழலை மிகவும் பாரதூரமானது என்று வர்ணித்த கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார, சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீதிமன்ற உத்தரவுகளுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கச் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தகவல் வழங்கலை மறுக்க முடியுமா? மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam