நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட விபரீதம் : திகில் அனுபவத்தை வெளியிட்ட பயணி

London United Kingdom Singapore Accident
By Benat May 22, 2024 03:27 PM GMT
Report

பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென விமானம் குலுங்கியதால் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ  வருத்தம் வெளியிட்டுள்ளார். 

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் குறிப்பிடுகையில், “பயணிகளின் உடமைகள் அங்கும் இங்குமாக சிதறி விழுந்தன. விமானத்தில் இருந்த காபி மற்றும் உணவு வகைகள் என அனைத்தும் சிதறின. பலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. வலியால் பலரும் அலறி துடித்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

விமானத்தில் நேர்ந்த விபத்து 

பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு போயிங் 777-300ER ரக விமானம் நேற்று சென்று கொண்டிருந்து.

இந்த விமானம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. 211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்கள் என மொத்தமாக 229 பேர் இந்த விமானத்தில் பயணித்தனர்.

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட விபரீதம் : திகில் அனுபவத்தை வெளியிட்ட பயணி | Plane Turbulence Singapore Airlines

இந்த பயணத்தின் போது திடீரென விமானம் பயங்கரமாக குலுங்கியது. அதனால் அவசர நிலையை கருத்தில் கொண்டு விமானி அந்த விமானத்தை பேங்கொக் நகரில் மதியம் 3.45 மணி அளவில் தரையிறக்கினார்.

இதில் பயணித்த பிரிட்டன் நாட்டை சேர்ந்த 73 வயது பயணி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பெரும்பாலான பயணிகள் காயமடைந்தனர்.

விமானம் தரையிறங்கியதும் அதில் பயணித்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி துரிதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இதற்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சிஇஓ ஃவாங்க் வீடியோ தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்கள் விமானத்தில் பயணித்தனர். அவசர சூழலை கருத்தில் கொண்டு விமானத்தை பேங்கொக் நகரில் விமானி தரையிறக்கினார். எதிர்பாராத இந்த அசம்பாவித சம்பவம் எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்துள்ளனர். சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சார்பில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் நாங்கள் அவரது குடும்பத்துக்கு உறுதுணையாக நிற்போம். விமானத்தில் பயணித்தவர்களுக்கு ஏற்பட்ட இந்த அபாயகர அனுபவத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். அனைவருக்கும் துணையாக நாங்கள் இருப்போம். இது தொடர்பான விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

விமானம் குலுங்கியது குறித்து பயணிகள் தெரிவிக்கையில்,

“திடீரென பயணிகள் விமானத்தின் கூரை மீது மோதி நாங்கள் கீழ்பக்கமாக விழுந்தோம். இதில் சீட் பெல்ட் அணியாதவர்கள் மோசமாக காயமடைந்தனர். சிலரது தலை பகுதி, பைகள் வைக்கும் கேபினில் போய் மோதியது. விமான பணியாளர்கள் மற்றும் கழிவறையில் இருந்தவர்கள் மிக மோசமாக காயமடைந்தனர். பெரும்பாலானவர்களுக்கு தலை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது” என விமானத்தில் பயணித்த மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட விபரீதம் : திகில் அனுபவத்தை வெளியிட்ட பயணி | Plane Turbulence Singapore Airlines

“நான் விமானத்தின் கூரையில் மோதி காயமடைந்தேன். நல்வாய்ப்பாக எனது குடும்பத்தினர் அனைவரும் உயிரோடு உள்ளனர். எனது மகன் இரண்டு வரிசை தரையில் பின்னோக்கி விழுந்தார். கழிவறையில் இருந்த நபர் மிகவும் மோசமாக காயமடைந்தார்” என பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“பயணிகளின் உடமைகள் அங்கும் இங்குமாக சிதறி விழுந்தன. விமானத்தில் இருந்த காபி மற்றும் உணவு வகைகள் என அனைத்தும் சிதறின. பலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. வலியால் பலரும் அலறி துடித்தனர். ஒருவருக்கொருவர் உதவ முடியவில்லை” என ஆண்ட்ரூ டேவிஸ் என்ற பயணி தெரிவித்துள்ளார். 

இறுதி யுத்தம் தொடர்பில் பொன்சேகா ஊடாக வெளிவரப்போகும் தகவல்கள்

இறுதி யுத்தம் தொடர்பில் பொன்சேகா ஊடாக வெளிவரப்போகும் தகவல்கள்

குறைந்த வருமானம் பெறும் இலங்கையர்களுக்கு கிடைக்கப்பெறும் வீடுகள்..!

குறைந்த வருமானம் பெறும் இலங்கையர்களுக்கு கிடைக்கப்பெறும் வீடுகள்..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US