நோர்வூட் நகர் உள்ளிட்ட இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் திடீர் சோதனை
நோர்வூட் நகரில் உள்ள கடைகள் மற்றும் பொது இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இன்று இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பொகவந்தலாவையில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பேருந்து ஒன்று பொலிஸாரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது பேருந்திலிருந்த பயணிகள் யாவரும் கீழே இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பேணாமலும் வந்த பயணிகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், சிலர் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் சுகாதார வழிகாட்டல்களை மீறி பயணிகளை ஏற்றி வந்த பேருந்தின் சாரதியும், நடத்துனரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பகுதியில் இன்றும் ஆங்காங்கே கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri