சிஐடியினரால் பிள்ளையானின் அலுவலகம் சுற்றிவளைப்பு
முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிள்ளையானின் குறித்த அலுவலகத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று(30.05.2025) காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கட்டிட நிலத்தை உடைத்து தோண்டி பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் எவரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
கருத்துக்கள் வெளியிடப்படவில்லை
மேலும், இது தொடர்பான கருத்துக்களை குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரோ விசேட அதிரடிப் படையினரோ இதுவரை வெளியிடவில்லை.
இதேவேளை, மட்டக்களப்பில் இரண்டு நாட்களுக்கு முன்னால் பல கோணங்களின் அடிப்படையில் பிள்ளையானின் சகாக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு குறிப்பிட்டிருந்தார்.
மேலதிக தகவல் - குமார், பவன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri