பிள்ளையான் - கருணா குழுவின் கடத்தல் மற்றும் கொலைகள்: அம்பலப்படுத்தும் சாரதி

CID - Sri Lanka Police Pillayan Vinayagamoorthi Muralidaran Easter Attack Sri Lanka Crime
By Vethu Apr 21, 2025 01:53 PM GMT
Report

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சாரதியிடம் இருந்து கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பிள்ளையான் விவகாரத்தில் ரணில் சிஐடியில் முன்னிலையாகவும் தயார்..!

பிள்ளையான் விவகாரத்தில் ரணில் சிஐடியில் முன்னிலையாகவும் தயார்..!

கடந்த 17ஆம் திகதி பிள்ளையானின் சாரதியாக செயல்பட்ட நபர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சாரதி வாக்குமூலம்

வாழைச்சேனையை சேர்ந்த 41 வயதான சாரதி தற்போது பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.


இந்த குற்றம் தொடர்பாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரையும், சாரதியையும் விசாரித்ததன் மூலமும், பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட பேராசிரியர் கொலை செய்யப்பட்ட இடங்களை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.

கருணா - பிள்ளையான் கும்பல்

இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்திய பின்னர், நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் சம்பவ இடத்தில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

பிள்ளையான் - கருணா குழுவின் கடத்தல் மற்றும் கொலைகள்: அம்பலப்படுத்தும் சாரதி | Pillayan S Driver Revealed Details To Cid

பிள்ளையானும் கருணாவும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பின்னர் உருவாக்கப்பட்ட TMVP குழுவினர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

கருணா - பிள்ளையான் தலைமையிலான குழுவின் செயற்பட்ட உறுப்பினர்கள் இவ்வாறான கடத்தல்களில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறானவர்கள் சுதந்திரமாக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை பெற்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு பிரிவு 

2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதியன்று பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத், கொழும்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது​​ கடத்தப்பட்டார். இந்தக் கடத்தல் TMVPயின் வேலை என்று அப்போது கூறப்பட்டது.

பிள்ளையான் - கருணா குழுவின் கடத்தல் மற்றும் கொலைகள்: அம்பலப்படுத்தும் சாரதி | Pillayan S Driver Revealed Details To Cid

இந்தக் கடத்தல் குறித்து ஆரம்பத்தில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றாலும், சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை முறையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட நபர் பிள்ளையான் ஆவார். பின்னர் அவரது சாரதி குற்றப் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச் செயலில் வேறு ஒரு குழுவும் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்காலத்தில் அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடத்தப்படும் என்று குற்றப் புலனாய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு சதி குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட 24 நபர்கள்!

உயிர்த்த ஞாயிறு சதி குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட 24 நபர்கள்!

வீதியெங்கும் மரண ஓலம்! பலியெடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதியின்றி தொடரும் ஆறாவது வருடம்..

வீதியெங்கும் மரண ஓலம்! பலியெடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதியின்றி தொடரும் ஆறாவது வருடம்..

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US