உயிர்த்த ஞாயிறு சதி குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட 24 நபர்கள்!

Maithripala Sirisena Ranil Wickremesinghe Easter Attack Sri Lanka
By Dharu Apr 21, 2025 06:18 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக  தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், 290 இழப்பீட்டு வழக்குகள், 12 அடிப்படை உரிமை மனுக்கள், 3 முக்கிய குற்றவியல் வழக்குகள், கடமை தவறியதற்காக 2 வழக்குகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 1 குற்றவியல் வழக்கு ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 நபர்களால், புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரி, இந்த வழக்கானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமரும்(2019ஆம் ஆண்டு) முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னால் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் அப்போதைய ரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோரிடமிருந்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிள்ளையான் கைது சந்தேகத்திற்குரியது! அர்ச்சுனா வெளிப்படை

பிள்ளையான் கைது சந்தேகத்திற்குரியது! அர்ச்சுனா வெளிப்படை

ரணில் விக்ரமசிங்க

இருப்பினும், அந்த வழக்குகளில் அப்போது பிரதமராக இருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்தாலும், அவர், ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அரசியலமைப்பின் 35 ஆவது பிரிவின் கீழ் அவருக்கு எதிரான வழக்கைத் தொடர முடியாது என்பதால் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

உயிர்த்த ஞாயிறு சதி குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட 24 நபர்கள்! | Easter Sunday Attack Allegations Against Maithri

மேலும்,  பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு பெரிய குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது.

அதில் சட்டமா அதிபர் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல், தாக்குதலுக்கு உதவுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

குறித்த பிரதிவாதிகளாக மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌபர் எனும் நௌபர் மௌலவி, மொஹமட் சரிபு ஆடம் லெப்பை (அபு ஹதீக்), ஹயாத் மொஹமட் மில்ஹான் (அபு சீலா), மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்), மொஹமட் இப்ராஹிம் அப்துல் ஹக் (அபுஸ் ஃபலாஹ்), மொஹமட் இப்ராஹிம் அப்துல் ஹக் (அபுஸ்கான்), மொஹமட் மன்சூர் மொஹமட் சனதீன் (அபு மிசான்), அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ், மொஹமட் ரமிஷ் மொஹமட் சாரிக், அப்துல் லத்தீப் மொஹமட் சஃபி (சாபி மௌலவி / அபு ஃபுர்கான்), ஹுசைனுல் ரிஸ்வி காலித் சமீர், மொஹமட் ஜாஹிர் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

மேலும்,  சந்தேகநபர்களாக முகமது ஹசன் (அபு தாவூத்), முகமது இல்திகார் முகமது இன்சாப் (அபு முகமது), ரஷீத் முகமது இப்ராஹிம், முகமது ஹனிபா ஜைனுல் அப்தீன் (அபு ஹினா), முகமது முஸ்தபா முகமது ஹரிஸ் (அபு நஞ்சியார்), ரஸீன் பாவா ஹுஸ்அமின், ஜாஸ்மின் அப்துல் ரவூப் ஜைனுல் அதீன் முகமது ஜசீன், முகமது முஸ்தபா முகமது ரிஸ்வான், மீரா சஹீத் முகமது நஃப்லி (அபு சனா), முகமது அமீன் அயன்துல்லா, முகமது அக்ரம் அஹக்கம் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

பிள்ளையான் விவகாரத்தில் ரணில் சிஐடியில் முன்னிலையாகவும் தயார்..!

பிள்ளையான் விவகாரத்தில் ரணில் சிஐடியில் முன்னிலையாகவும் தயார்..!

அரசியலமைப்பின் விதிகள்

முன்னதாக அரசியலமைப்பின் விதிகளின்படி ஜனாதிபதி சிறப்புரிமைகள் மூலம் ரணில் விக்ரமசிங்க வழக்கில் இருந்து விலகிக் கொண்டாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக அவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவினர்களால் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில்  இழப்பீடு கோரி 182 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு சதி குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட 24 நபர்கள்! | Easter Sunday Attack Allegations Against Maithri

இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் மாநில புலனாய்வு சேவைத் தலைவர் நிலந்த ஜெயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டனர்.

மேலும், தாக்குதல் நடக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதைத் தடுக்கத் தவறியதற்காக, முன்னாள் ஐஜிபி பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன், சட்டமா அதிபர் இரண்டு தனித்தனி வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தார்.

அவர்கள் மீது மொத்தமாக தலா 850 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதில் குற்றவியல் கடமை தவறுதல் மற்றும் கொலை ஆகியவை அடங்கும் எனவும் கூறப்படுகிறது.

வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, பூஜித ஜெயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.

இதேபோல், உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தாக்குதல் நடக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் அதைத் தடுக்கத் தவறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, மாநில புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜெயவர்தன மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்புகளை அறிவித்தது. அதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் மாநில புலனாய்வு சேவைத் தலைவர்  75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ்க்கு அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடாக 10 மில்லியன் ரூபாவும் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரிய முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன

உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரிய முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன

8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Scarborough, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
நன்றி நவிலல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US