உயிர்த்த ஞாயிறு சதி குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட 24 நபர்கள்!

Maithripala Sirisena Ranil Wickremesinghe Easter Attack Sri Lanka
By Dharu Apr 21, 2025 06:18 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக  தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், 290 இழப்பீட்டு வழக்குகள், 12 அடிப்படை உரிமை மனுக்கள், 3 முக்கிய குற்றவியல் வழக்குகள், கடமை தவறியதற்காக 2 வழக்குகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 1 குற்றவியல் வழக்கு ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 நபர்களால், புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரி, இந்த வழக்கானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமரும்(2019ஆம் ஆண்டு) முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னால் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் அப்போதைய ரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோரிடமிருந்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிள்ளையான் கைது சந்தேகத்திற்குரியது! அர்ச்சுனா வெளிப்படை

பிள்ளையான் கைது சந்தேகத்திற்குரியது! அர்ச்சுனா வெளிப்படை

ரணில் விக்ரமசிங்க

இருப்பினும், அந்த வழக்குகளில் அப்போது பிரதமராக இருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்தாலும், அவர், ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அரசியலமைப்பின் 35 ஆவது பிரிவின் கீழ் அவருக்கு எதிரான வழக்கைத் தொடர முடியாது என்பதால் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

உயிர்த்த ஞாயிறு சதி குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட 24 நபர்கள்! | Easter Sunday Attack Allegations Against Maithri

மேலும்,  பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு பெரிய குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது.

அதில் சட்டமா அதிபர் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல், தாக்குதலுக்கு உதவுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

குறித்த பிரதிவாதிகளாக மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌபர் எனும் நௌபர் மௌலவி, மொஹமட் சரிபு ஆடம் லெப்பை (அபு ஹதீக்), ஹயாத் மொஹமட் மில்ஹான் (அபு சீலா), மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்), மொஹமட் இப்ராஹிம் அப்துல் ஹக் (அபுஸ் ஃபலாஹ்), மொஹமட் இப்ராஹிம் அப்துல் ஹக் (அபுஸ்கான்), மொஹமட் மன்சூர் மொஹமட் சனதீன் (அபு மிசான்), அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ், மொஹமட் ரமிஷ் மொஹமட் சாரிக், அப்துல் லத்தீப் மொஹமட் சஃபி (சாபி மௌலவி / அபு ஃபுர்கான்), ஹுசைனுல் ரிஸ்வி காலித் சமீர், மொஹமட் ஜாஹிர் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

மேலும்,  சந்தேகநபர்களாக முகமது ஹசன் (அபு தாவூத்), முகமது இல்திகார் முகமது இன்சாப் (அபு முகமது), ரஷீத் முகமது இப்ராஹிம், முகமது ஹனிபா ஜைனுல் அப்தீன் (அபு ஹினா), முகமது முஸ்தபா முகமது ஹரிஸ் (அபு நஞ்சியார்), ரஸீன் பாவா ஹுஸ்அமின், ஜாஸ்மின் அப்துல் ரவூப் ஜைனுல் அதீன் முகமது ஜசீன், முகமது முஸ்தபா முகமது ரிஸ்வான், மீரா சஹீத் முகமது நஃப்லி (அபு சனா), முகமது அமீன் அயன்துல்லா, முகமது அக்ரம் அஹக்கம் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

பிள்ளையான் விவகாரத்தில் ரணில் சிஐடியில் முன்னிலையாகவும் தயார்..!

பிள்ளையான் விவகாரத்தில் ரணில் சிஐடியில் முன்னிலையாகவும் தயார்..!

அரசியலமைப்பின் விதிகள்

முன்னதாக அரசியலமைப்பின் விதிகளின்படி ஜனாதிபதி சிறப்புரிமைகள் மூலம் ரணில் விக்ரமசிங்க வழக்கில் இருந்து விலகிக் கொண்டாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக அவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவினர்களால் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில்  இழப்பீடு கோரி 182 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு சதி குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட 24 நபர்கள்! | Easter Sunday Attack Allegations Against Maithri

இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் மாநில புலனாய்வு சேவைத் தலைவர் நிலந்த ஜெயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டனர்.

மேலும், தாக்குதல் நடக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதைத் தடுக்கத் தவறியதற்காக, முன்னாள் ஐஜிபி பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன், சட்டமா அதிபர் இரண்டு தனித்தனி வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தார்.

அவர்கள் மீது மொத்தமாக தலா 850 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதில் குற்றவியல் கடமை தவறுதல் மற்றும் கொலை ஆகியவை அடங்கும் எனவும் கூறப்படுகிறது.

வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, பூஜித ஜெயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.

இதேபோல், உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தாக்குதல் நடக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் அதைத் தடுக்கத் தவறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, மாநில புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜெயவர்தன மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்புகளை அறிவித்தது. அதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் மாநில புலனாய்வு சேவைத் தலைவர்  75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ்க்கு அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடாக 10 மில்லியன் ரூபாவும் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரிய முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன

உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரிய முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன

மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US