ஈரானின் திடீர் தீர்மானம்.. வளைகுடா போர்பதற்றத்தில் அதிரடி திருப்பம்!
புதிய இணைப்பு
ஈரானிய வெளியுறவு அமைச்சர் இன்று இஸ்லாமாபாத் செல்கிறார் என ஈரான் அரசு ஊடகங்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.
முதலாம் இணைப்பு
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இன்று இரவு ஒரு சிறிய குழுவுடன் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுடனான பதற்றத்தைத் தணிப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்கவுள்ளதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான விரிசலைச் சரிசெய்ய பாகிஸ்தான் அரசு மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
திடீர் தீர்மானம்..
பேச்சுவார்த்தைக்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவினர் ஏற்கனவே இஸ்லாமாபாத் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய அமைச்சர் அராக்சியுடன் பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்திய பின், அமெரிக்கக் குழுவுடனான சந்திப்பு இடம்பெறும் என கூறப்படுகின்றது.
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமே இல்லை என ஈரான் திட்டவட்டவமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை சர்வதேச அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.