இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி
கோவிட் தொற்று நோய்களுக்கு மத்தியில், வெளிநாட்டு பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுக்கு குறிப்பாக அவர்கள் திருப்பி அனுப்ப உதவியதற்காக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டூர்ட்டே, இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஜூன் 28 அன்று டூர்ட்டேயும் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்வும் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலின் போது இரண்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் பிலிப்பைன்ஸ் பிரஜைகளை திருப்பி அனுப்புவதற்கு உதவியதற்காகவும், செப்டெம்பர் 2020 இல் இலங்கையின் கிழக்கு கடற்கரையில் தீப்பிடித்த எம்.டி .நியூ டயமண்டில் இருந்த பிலிப்பைன்ஸ் கடற்படையினரை பாதுகாப்பாக திரும்பியமைக்காகவும், இலங்கை அரசாங்கத்திற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, தொழிலாளர், இடம்பெயர்வு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட ஒத்துழைப்பின் பிற துறைகளையும் இரண்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்னர்.

எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்த எலக்ட்ரீஷியனின் மகள்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரி News Lankasri

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
