18 முதல் 19 அகவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி
இலங்கையின் தடுப்பூசி தொழில்நுட்பக்குழு 18 முதல் 19 அகவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் அளவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்க முடிவு செய்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தடுப்பூசி தொழிநுட்பக்குழு, 15-19 அகவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசிகளை வழங்க தமது ஒப்புதலை வழங்கியிருந்தது.
இதனையடுத்து தடுப்பூசி வழங்கல், அகவை அடிப்படையில் இறங்கு வரிசையில் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவத் துறையினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஆரோக்கியமான பிள்ளைகளுக்கான தடுப்பூசி திட்டத்தின் முதல் படியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி தடுப்பூசி வழங்கல், சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகம் மற்றும் அரச மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும்.
இதேவேளை,நாடு முழுவதும் உள்ள மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களை பயன்படுத்தும் அதே பொறிமுறையைப் பயன்படுத்தி 15-19 அகவைக்குட்பட்ட ஆரோக்கியமான பிள்ளைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க தமது சங்கம் முன்மொழிந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
