மகிந்தவிற்கு எதிராக வழக்கு தொடுத்தவரின் நிலை
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு காரணமாக ராஜபக்ச குடும்பத்தினரை குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அப்போது, இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ராஜபக்ச குடும்பத்தின் மூவர் காரணம் என நீதிமன்றமும் தீர்ப்பளித்திருந்தது.
எனினும், இந்த வழக்கின் முடிவு, வழக்கு தொடர்ந்தவர் என்ன நிவாரணத்தை எதிர்பார்க்கின்றார் என்பதை பொறுத்தும் இருக்கின்றது.
வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட காலப்பகுதியில் இவர்கள் தான் குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் வழக்கு முடிந்து விட்டதாக பலரும் கூறினர்.
இந்நிலையில், இந்த வழக்கை வேறு யாரவது முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எம். கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



