சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! கைபேசியில் கடவுச்சொல்லாக பதியப்பட்ட முகம் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் இன்று (12) நடைபெற்றுள்ளது.
குறித்த விசாரணையை நடத்தி வரும் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கை
அதன்படி, பிரேத பரிசோதனை தொடர்பான இரண்டு இணைப்பு ஆவணங்களையும் மேலதிக அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இதன்போது சாட்சியம் முன் உண்மைகளை முன்வைத்த கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், உயிரிழந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு இரத்த மாதிரிகளை அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை கோர அனுமதி கோரியுள்ளனர்.
சந்தேகநபரின் முகம் கடவுச்சொல்லாக கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது கைபேசியை திறக்க அதனைத் தயாரிப்பாளரிடமோ அல்லது உரிய நிறுவனத்திடமோ ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட, இறந்தவரின் கழுத்திலிருந்த துணி அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டதா என்றும் வினவப்பட்டுள்ளது. அது ஒரு வழக்குப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம்
காகிதத்துண்டில் அடையாளம் காணப்பட்ட மருந்துகள்
"சம்பவ நிகழ்விடத்தில் சில மருந்துகள் இருந்தன. மேலும், ஒரு காகிதத்துண்டில் அடையாளம் வெளியிடப்படாத சில மருந்துகளும் இருந்தன. அவை அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டதா?" என்று நீதிபதி கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் வினவியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவ குழுவிற்கு அந்த மருந்துகள் அனுப்பப்பட்டதாகவும்,அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு மனுவின் மூலம் கோரப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியிடம் கொழும்பு குற்றப் பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கில் நிலைக்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை - அடுத்த 36 மணிநேர வானிலையில் மாற்றம்
YOU MAY LIKE THIS VIDEO
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam