ஈழத் தமிழர்களின் நம்பிக்கையாக மாறுவாரா விஜய்.. எதிர்பார்ப்பில் புலம்பெயர் தேசம்!
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள முதலமைச்சர் விஜய், ஈழத் தமிழர் விவகாரத்தில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் என்பதே உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களின் தற்போதைய பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு கால அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்யின் கைகளில், தொப்புள்கொடி உறவுகளின் எதிர்கால நம்பிக்கையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈழப்போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழக அரசியல் தலைவர்கள் வெறும் தீர்மானங்களோடும், போராட்டங்களோடும் நின்றுவிட்டனர் என்ற அதிருப்தி ஈழத்தமிழர்களிடையே உண்டு.
இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள விஜய்க்கு, ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு, தாயகம் திரும்பியவர்களின் குடியுரிமை மற்றும் ஈழ அகதிகள் முகாம்களின் மேம்பாடு போன்ற முக்கிய சவால்கள் காத்திருக்கின்றன.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! கைபேசியில் கடவுச்சொல்லாக பதியப்பட்ட முகம் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam