அமெரிக்காவில் பல்பொருள் அங்காடிக்குள் துப்பாக்கிச் சூடு - பலர் உயிரிழப்பு
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் - பஃபலோ நகரின் ஜெபர்சன் வீதியில் அமைந்துள்ள சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள் இன்று பிற்பகல் (உள்ளூர் நேரம்) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் சுடப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலைமைகள் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இந்நிலையில், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த பல்பொருள் அங்காடியானது, பஃபேலோ நகரத்திற்கு வடக்கே சுமார் 3 மைல் (5 கிலோமீட்டர்) தொலைவில், கறுப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ளது.







6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
