மன்னாரில் எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Video)
மன்னாரில் எரிபொருள் நிரப்புவதற்கும் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இன்று அதிகாலை லிட்ரோ நிறுவனத்தின் ஒரு தொகுதி எரிவாயு சிலிண்டர்கள் குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவற்றை பெறுவதற்கு நேற்று நள்ளிரவு முழுவதும் மக்கள் வரிசையில் நின்று பெற்றுச்சென்றனர்.
அதே நேரம் மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவானவர்கள் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விநியோக நிலையங்களில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.