நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி! கிராமத்துக்குச் செல்லும் நாடாளுமன்றம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு அதிருப்தி உள்ளதால் நாடாளுமன்றத்தை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவுள்ளார்.
மக்களின் காலடிக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது மற்றும் அவர்களின் யோசனைகளை உள்வாங்கிச் செயற்படுத்துவதுமே இதன் நோக்கம் ஆகும்.
வேலைத்திட்டம் வரையும் பொறுப்பு
இதற்கான வேலைத்திட்டத்தை வரையும் பொறுப்பை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் ஜனாதிபதி கையளித்துள்ளார்.
எதிர்வரும் சித்திரைப் புதுவருடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கல்விமான்களையும்
ஒன்றிணைத்துக் களமிறக்குவதற்காக வேலைத்திட்டம் ஒன்றை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
