மக்கள் கிளர்ந்தெழும் போதுதான் எங்களுக்கான விடுதலையை வென்றெடுக்க முடியும்: வேலன் சுவாமிகள் (Video)

Sri Lanka Government Of Sri Lanka India
By Erimalai Oct 06, 2022 10:48 AM GMT
Report

மக்கள் கிழர்ந்தெழும் போதுதான் எங்களுக்கான விடுதலையை நாங்கள் வென்றடுக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை கூட்டு சதி மூலம் கொல்லப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12 பேரின் நினைவேந்தலில் கலந்து கொண்டு நினைவுரையாற்றும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12 வீர வேங்கைகள் தங்களுடைய இன்னுயிர்களை எங்களுடைய இனத்தினுடைய விடுதலைக்காகவும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தனிநாட்டிலே நாங்கள் வாழ்வதற்க்காகவும், அர்பணித்த நாளினுடைய முப்பத்தி ஐந்தாவது ஆண்டு நினைவேந்தல் இன்று.


தமிழீழம்

தமிழர்களாகிய எங்களுடைய விடுதலைப் போராட்டம் அரசியல் ரீதியில் பல வேண்டுகோள்களை முன்வைத்த 30 வருடங்களாக நடைபெற்று சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையிலே பயணித்த பயணம் கடந்த 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்திலே இனி தமிழர்களுக்கு தங்களுக்கு என்று ஒரு தனியான நாடு தமிழீழம் அமைவதுதான் ஒரே தீர்வு என்ற தீர்மானம் எட்டப்பட்டது.

தொடர்ந்து அடுத்த வருடம் நடைபெற்ற தேர்தலிலே மக்கள் அனைவரும் தனித் தமிழீழத்திற்க்கான மக்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள். அதனை தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடிய விடுதலைப் போராட்டம் தனிநாட்டுக்கான போராட்டமாகும்.

அதிலே ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுவது இந்திய, இலங்கை ஒப்பந்தமாகும்.

இன்னுயிர்களை ஈந்த சம்பவம்

அந்த ஒப்பந்தத்தை மீறக் கூடிய விதத்திலே இந்திய அமைதிகாக்கும் படைகள் எங்களுடைய தாயகத்தில் வந்து செய்திருக்கக்கூடிய அநியாயங்கள், அட்டூழியங்கள், இதற்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக தளபதிகள் குமரப்பா புலேந்திரன் அவர்கள் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்த சம்பவமாகும்.

இதன் அடிப்படையில்தான் மீண்டும் அந்த யுத்தம் ஆரம்பித்து கடந்த 2009 ஆம் ஆண்டின் மௌனிக்கப்பட்ட சூழ்நிலையிலே இன்று ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் எங்களுக்காக, எங்களுடைய மண்ணினுடைய விடுதலைக்காக, எங்களுடைய இனத்தினுடைய உரிமைகளை பெற்றுக் கொண்டவர்களுக்காக நடைபெறுகின்ற இந்த நினைவேந்தல் நிகழ்வுகளிலே மக்கள் எழுச்சியாக அணிதிரண்டு பங்கு பற்ற வேண்டும்.

மக்கள் கிளர்ந்தெழும் போதுதான் எங்களுக்கான விடுதலையை வென்றெடுக்க முடியும்: வேலன் சுவாமிகள் (Video) | People Rise Up Can We Win Our Freedom

மக்கள் புரட்சியின் ஊடாகத்தான் நாங்கள் எங்களுடைய விடுதலையை பெற்றுக் கொள்ள முடியும். ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதனூடாக எங்களுடைய தலைவிதியை நாங்களே தீர்மானிக்கக் கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வைத்தான் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

அந்த ஒரு அடிப்படையிலேயே எங்களுடைய மாவீரர்களுடைய தியாகங்கள் அவர்களுடைய அர்ப்பணிப்புகள் அது எங்களுடைய உறவுகள் அனைவரும் அறிந்ததே.

ஐக்கிய நாடுகள் சபை

இந்நிலையில் எங்களுடைய மக்கள் கிழர்ந்தெழும் போதுதான் எங்களுக்கான விடுதலையை நாங்கள் முழுமையாக அடைய முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் பேரவை இன்று கொண்டு வந்திருக்கக்கூடிய ஒரு தீர்மானம் அல்லது கொண்டு வர இருக்கின்ற ஒரு தீர்மானம் எங்களுக்கான ஒரு தீர்வினை அல்லது எங்களுக்கான ஒரு அபிலாசைகளை பூர்த்தி செய்கின்ற விதத்திலும் அமையவில்லை.

நாங்கள் எல்லாத் தளங்களிலும், எல்லாத் தரப்புகளிலும், போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தாலும் எப்பொழுது எங்களுடைய மக்கள் எழுச்சியாக அணி திரள்வார்களோ அப்பொழுதுதான் எங்களுடைய விடுதலை சாத்தியமாகும்.

மக்கள் கிளர்ந்தெழும் போதுதான் எங்களுக்கான விடுதலையை வென்றெடுக்க முடியும்: வேலன் சுவாமிகள் (Video) | People Rise Up Can We Win Our Freedom

அதனூடாக ஏற்படுகின்ற மக்கள் எழுச்சியின் மூலமாக எங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்ற செய்தியை இந்த நேரத்தில் சொல்லி நிற்கின்றோம் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என தெரிவித்துள்ளார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறை குமரப்பா புலேந்திரன் உட்பட்டவர்களின் நினைவாலயத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலமையில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மௌன வணக்கத்தோடு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US