முல்லைத்தீவில் இராணுவத்தால் மக்கள் பெரும் அவலம்! - காய்ச்சலுக்கு வைத்தியசாலைக்கு செல்லவும் அனுமதி மறுப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளமையால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட கோவிட் அறிகுறிகளுக்குக்கூட வைத்தியசாலைக்குச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. வைத்தியசாலைக்குச் செல்வதற்காக வீதிக்கு வரும் பொதுமக்களைப் படையினர் திருப்பி அனுப்புகின்றனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கொத்தணி உருவாகியுள்ளது. இதையடுத்து புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவு ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஆடைத்தொழிற்சாலையால் பலருக்குத் தொற்றுப் பரவியிருக்கலாம் என்ற அச்சம் சுகாதாரத் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தவர்கள் பலர் தொற்றுக்கு உள்ளாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று கூறப்படுகின்றது.
அவ்வாறான குடும்ப உறுப்பினர்களும் இந்த முடக்கப்பட்ட பகுதிகளுக்குள்
இருப்பதால், தொற்று அறிகுறி தென்பட்டாலும் வைத்தியசாலைக்குச் செல்ல முடியாத
நிலை காணப்படுகின்றது.
வைத்தியசாலைக்குச் செல்வதற்கு வீதிகளுக்கு வந்தால் கடமையிலுள்ள இராணுவத்தினர்
அவர்களைத் திருப்பி அனுப்புகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு News Lankasri
