சாப்பாடு கேட்டு வீதியில் இறங்கும் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல-சரத் பொன்சேகா

Sarath Fonseka Sri Lankan protests Inter University Students Federation Sri Lanka Prevention of Terrorism Act
By Steephen Oct 29, 2022 05:23 AM GMT
Report

இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை எனவும் சாப்பிடவும் குடிக்கவும் கேட்டு வீதியில் இறங்கும் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவின் நலன் அறிய நேற்று சென்றிருந்த போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா இதனை கூறியுள்ளார்.

வசந்த முதலிகேவுக்கு மோசமான தொழுநோய் ஏற்பட்டுள்ளது

சரத் பொன்சேகா-Sarath Fonseka

வசந்த முதலிகே என்ற பல்கலைக்கழக மாணவன், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 90 நாட்கள் தடுப்பு காவல் அனுமதி பெற்று ஏற்கனவே இரண்டு மாதங்கள் தடுத்து வைத்துள்ளனர்.

இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாட்டில் பயங்கரவாதம் இல்லை. நாட்டு மக்கள், சாப்பிடவும் குடிக்கவும் இல்லாத காரணத்தினால் குரல் எழுப்புகின்றனர்.

பயங்கரவாதத்தை உருவாக்கி, அப்படி குரல் கொடுக்கும் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி தடுத்து வைத்திருப்பது, கோழைத்தனமான செயல் என்பதுடன் அடிப்படை உரிமை மீறலாக நாங்கள் பார்க்கின்றோம். அதேபோல் மனித உரிமை மீறல்.

வசந்த முதலிகே சுகவீனமாக இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டேன். வசந்த முதலிகேவுக்கு மோசமான தொழுநோய் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்படும் வசதிகளின் குறைப்பாடுகள் காரணமாக இந்த நோய் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறிதம்ம தேரரும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவற்றுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். இளம் பிள்ளைகளை பிடித்துக்கொண்டு வந்தது, இங்கு தடுத்து வைக்கும் போது, அவர்களுக்கு நோய்கள் தொற்றும்.உயிருக்கும் ஆபத்து. இதனால், நான் அந்த நிலைப்பற்றி அறிய இங்கு வந்தேன்.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதிப்பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக குணசேகர, சட்டத்திற்கு அமைய பார்வையிட அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எமக்குள்ள சிறப்புரிமைகளுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுக்கு இருக்கும் இடத்திற்கு சென்று பார்வையிடும் உரிமையுள்ளது. இதனால், அவர்களின் சட்டம் எம்மை தடுக்க முடியாது என தெளிவுப்படுத்தினேன்.

ஆனால், அவர் அதனை புரிந்துக்கொள்ளவில்லை. என்னுடன் இருந்த சட்டத்தரணிகளும் இதனை தெளிவுப்படுத்தினர், எனினும் அவர் அதனை ஏற்க தயாராக இருக்கவில்லை. எனக்கு வசந்த முதலிகேவை பார்க்க அனுமதி வழங்கவில்லை.

அரச பயங்கரவாதம் இருப்பதாக தோன்றுகிறது

சரத் பொன்சேகா-Sarath Fonseka

இந்த இடத்தில் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். ஒருவர் என்னுடன் பேசினார். பல்கலைக்கழக மாணவர் ஒருவரை கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.

மாணவனின் தந்தை படை வீரர். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர்களின் பிள்ளைகளுக்கு குரல் கொடுக்கவும் சுதந்திரமாக வாழவும் பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், இது மிகவும் பயங்கரமான நிலைமை. அரச பயங்கரவாத இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இதற்கு எதிராக நாங்கள் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்போம். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக நான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US