சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் - ஓய்ந்து போகும் அநுர அலை

Dollar to Sri Lankan Rupee Anura Kumara Dissanayaka Sri Lanka Tourism Sri Lankan Peoples Passport
By Vethu Oct 29, 2024 04:16 AM GMT
Report

இலங்கையில் அநுர அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதத்தையும் கடந்து விட்ட நிலையில், மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது.

நாட்டில் சடுதியாக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. பணவீக்கம் குறைவடைந்துள்ளது என பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும் மக்கள் வாழ்க்கை செலவு மட்டும் எந்தவித மாற்றமும் இன்றி அதிகரிப்பிலேயே உள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

புலனாய்வுத்துறையை புதிய அரசு பலப்படுத்த வேண்டும்: அநுர தரப்பிடம் கோரிக்கை

புலனாய்வுத்துறையை புதிய அரசு பலப்படுத்த வேண்டும்: அநுர தரப்பிடம் கோரிக்கை

பாதகமான விளைவு

கடந்த ரணில் அரசாங்கத்தின் இறுதிக்காலப்பகுதி சுமுகமான நிலையில் இருந்த போதும், தற்போது அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பலர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் - ஓய்ந்து போகும் அநுர அலை | People Angry On Anura Government Economic Crisis

இந்த மாதத்தில் பொருட்களின் விலைகளில் கணிசமான அதிகரிப்பை உணர்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் பொருட்களுக்காக 10 ஆயிரம் ரூபா செலவிட்ட நிலையில், அதே பொருட்களுக்கு தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகை செலவிடுவதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆட்சியை பொறுப்பேற்றதுடன் பல்வேறு மாற்றங்களை செய்யப் போவதாக தேர்தல் மேடைகளில் சூளுரைத்த சமகால ஜனாதிபதி, தனது ஆட்சியை பலப்படுத்தும் நோக்கிலேயே செயற்படுவதாகவும், மக்கள் நலன்சார்ந்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையும் பலர் குறைப்பட்டுள்ளனர்.

அறுகம் குடா பகுதிக்குள் ஊடுருவிய மொசாடின் விசேட திட்டம்

அறுகம் குடா பகுதிக்குள் ஊடுருவிய மொசாடின் விசேட திட்டம்

டொலரின் பெறுமதி

கடந்த ரணில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சாதகமான நிலைப்பாட்டினை சமகால அரசாங்கம் அனுபவித்து வருவதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் - ஓய்ந்து போகும் அநுர அலை | People Angry On Anura Government Economic Crisis

தற்போதைய அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வேலைத்திட்டங்களை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்திருந்தனர்.

அதன் காரணமாக பெருந்தொகை சுற்றுலா பயணிகளால் அமெரிக்க டொலர் உள்வருகை அதிகரித்துள்ளது.

மத்திய வங்கியில் டொலரின் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், அதன் கட்டுப்பாட்டு விலையை சடுதியாக குறைக்கவும் சமகால அநுர அரசினால் முடிந்துள்ளதாகவே பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரணிலின் பொய்யான தேர்தல் வாக்குறுதி: பகிரங்கப்படுத்தும் பிரதமர்

ரணிலின் பொய்யான தேர்தல் வாக்குறுதி: பகிரங்கப்படுத்தும் பிரதமர்

கடவுச்சீட்டு நெருக்கடி

அதேவேளை, கடந்த பல மாதங்களாக நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட வரிசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் - ஓய்ந்து போகும் அநுர அலை | People Angry On Anura Government Economic Crisis

எனினும் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருக்கின்றனர்.

கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாலை நான்கு மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டிருந்த அநுர அலை தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளதுடன், அரசின் மீது மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, புதிய அரசாங்கம் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், அதற்காக சில காலங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என சில தரப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். 

You May Like This Video


மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US