ஜூம்மா தொழுகைகள் தற்காலிகமாக நிறுத்தம்
நாட்டுக்குள் தற்போது நிலவும் கோவிட் -10 தொற்று நோய் பரவல் நிலைமை காரணமாக முஸ்லிம் பள்ளவாசல்களில் வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகை, ரமழான் மாதத்தை முன்னிட்டு நடத்தப்படும் விசேட தொழுகைகள் உட்பட சமய கடமைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வஹ்ப் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ள முஸ்லிம் சமயம் மற்றும் கலாசார விவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் முஸ்லிம் பள்ளிவாசல்களில் நடக்கும் தினமும் ஐந்து வேளை தொழுகைகளில் கலந்துக்கொள்வோரின் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பள்ளிவாசல்களில் ஐந்து வேலை தொழுகைகளில் 25 பேர் மாத்திரமே கலந்துக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மக்களுக்கு வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகை என்பது கட்டாயமானது என்பதுடன் புனித ரமழான் மாதத்தில் அந்த தொழுகையானது முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.