மாவீரர் துயிலும் இல்லங்களில் சப்பாத்துக் கால்களுடன் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்: நாடாளுமன்றத்தில் மகிந்தவிடம் பகிரங்க கேள்வி
தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் போரின் போது உயிர்நீத்தவர்களை நினைவுக்கூர மறுக்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினார்.
மாவீரர் துயிலுமில்லங்களில் இராணுவ உறுப்பினர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் தமது சப்பாத்து கால்களுடன் துயிலுமில்லங்களில் நடக்கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.
”சிங்கள இராணுவ உறுப்பினர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் ஒன்றில் தமிழ் இராணுவ உறுப்பினர் ஒருவர் சப்பாத்து கால்களுடன் சென்றால் அதனை கண்டு உங்கள் மனம் எந்தளவு புண்படும்” என்று சிறீதரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.
”இறந்து போனவர்களின் ஆத்மாக்களின் மீது சப்பாத்து கால்களுடன் செல்வது நிறுத்தப்படும் வரை இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படப்போவதில்லை” என்றும் சிறீதரன் குறிப்பிட்டார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam