தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கவா நிதியுதவிகள்? சர்வதேச நிறுவனங்களிடம் கேள்வி (Video)
வவுனியா வடக்கின் வெடிவைத்தகுளம் பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை.
எனினும் புதிதாக சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசத்தின் பெரியக்கட்டிக்குளம் பகுதியில் இருந்த கச்சல்சம்பளங்குளம் என்ற கிராமத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு “சப்புல்தென்ன“ என்ற சிங்கள கிராமம் அமைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்குகின்றபோது அது தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைப்பதற்காகவா வழங்கப்படுகிறது என்று இலங்கைக்கு உலக வங்கி உட்பட்ட உதவு நிறுவனங்களிடம் தாம் வினவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri