மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மாபாவின் 35வது தியாகிகள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபாவின் 35வது தியாகிகள் தினத்தையிட்டு 'தியாகிகளின் சமாதிகளே ஆராதனைக்குரிய தேவாலயங்கள்' எனும் தொனிப்பொருளில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நினைவேந்தல் இன்று (21) கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.
மலர் தூவி மௌன அஞ்சலி
இதன்போது பத்மநாபாவின் திருஉருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபச்சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அனுஷ்டித்தனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப். சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம், ஜனநாயக தமிழ் கூட்டமைப்பின் ஏறாவூர் நகரசபையின் பிரதி தவிசாளர் ஞா.கஜேந்திரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், உயிர் நீத்த தியாகிகளின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்றப்பட்ட பொது சுடர்
இதன்போது படுகொலை செய்யப்பட்ட கட்சியின் தலைவர் தோழர் பத்மநாபாபின் திருஉருவ படத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் மலர்மாலை அணிவித்து பொது சுடர் ஏற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து நினைவேந்தலில் பங்கெடுத்து கொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 14 மணி நேரம் முன்

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
