நெடுந்தீவில் நடந்த கொடூரம்: பொலிஸாருக்கு பயந்து உரிமையாளர்களின் வெறிச்செயல்
இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள், பொலிஸாரைக் கண்டதும் உரிமையாளர்களால் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மேலும் தெரியவருவதாவது,
சுமார் இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து 144 புறாக்கள் கடல் மார்க்கமாக நெடுந்தீவுக்குக் கடத்தி வரப்பட்டுள்ளன.
அங்கிருந்து பகுதி பகுதியாக யாழ்ப்பாணத்திற்குப் புறாக்களைக் கடத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கைது
இந்நிலையில், நேற்றுமுன்தினம் முதற்கட்டமாக 44 புறாக்களைக் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது, கடற்படையினர் அவற்றை வழிமறித்து மூவரைக் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், எஞ்சிய நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீயிட்டுக் கொளுத்திய உரிமையாளர்கள்
நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புறாக்களை மீட்பதற்காகப் பொலிஸார் வருவதை அறிந்த வீட்டின் உரிமையாளர்கள், சட்ட நடவடிக்கைக்கும் ஆதாரங்களுக்கும் அஞ்சி அதிர்ச்சிகரமான முடிவை எடுத்து, புறாக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்த போது, சுமார் 50 இற்கும் மேற்பட்ட புறாக்கள் தீயில் கருகி உயிரிழந்தும், காயங்களுடன் துடிதுடித்துக் கொண்டும் இருந்துள்ளன.

எஞ்சிய புறாக்களையாவது காப்பாற்றும் நோக்கில் பொலிஸார் உடனடியாகக் கூண்டைத் திறந்து விட்டுள்ளனர். இதன் மூலம் ஏனைய புறாக்கள் பறந்து சென்று உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரச் செயல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, தப்பியோடிய வீட்டின் உரிமையாளர்களைத் தேடி வருகின்றனர்.
தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முடியுமா..! 51 நிமிடங்கள் முன்
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam