கிளிநொச்சி வடக்கு வலய ஆசிரியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு இடைக்கால தடைக்கட்டளை
கிளிநொச்சி வடக்கு வலய ஆசிரியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இடைநிறுத்தும் இடைக்கால தடைக்கட்டளை கிளிநொச்சி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலய ஆசிரியர் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் வழங்கப்பட்ட இடமாற்றம் முறையற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்ற கட்டளைக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரியும், குறித்த இடமாற்ற கடிதத்தை இரத்து செய்யுமாறு கோரியும், எழுத்தாணை மனு கிளிநொச்சி மேல் நீதிமன்றில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனால் ஆசிரியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால தடைக்கட்டளை
குறித்த வழக்கின் விசாரணை நேற்று (21.10.2025) மாலை 2.00 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்வைத்த சமர்ப்பணங்களின் அடிப்படையில், குறித்த ஆசிரியருக்கு வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் கிளிநொச்சி வடக்கு வலயத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இடைநிறுத்தும் இடைக்கால தடைக்கட்டளை நீதிபதி T.அலெக்ஸ் ராஜாவால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 03.11.2025ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri