மட்டக்களப்பில் கடற்றொழிலுக்காக சென்ற 19 வயது இளைஞன் மாயம்
களுவாஞ்சிகுடி கடலில் கடற்றொழில் படகில் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சென்ற குறித்த இளைஞன் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் நேற்று (24) முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
படகு கண்டுபிடிப்பு..
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை ஸ்ரீமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடற்றொழிலுக்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ளார்.

இருப்பினும் இளைஞன் வீடு திரும்பாத நிலையில், குறித்த கடற்பகுதிக்கு படகில் கடற்றொழிலாளர்கள் சென்று தேடியுள்ளனர்.
இதன்போது படகை கண்டுபிடித்த போதிலும் இளைஞன் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam