விபத்துக்கு பின்னர் முற்றிய வாக்குவாதத்தால் ஒருவர் பலி
வரகாபொல - அத்னாவல பகுதியில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் போது இரு தரப்பினருக்கும் நடந்த வாக்குவாதத்தில் ஒருவர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (08) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஏற்பட்டுள்ளது.
உறவினர்கள் இருவரின் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளான போது இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 63 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் கைது...
சம்பவத்தின் போது வாக்குவாதம் தீவிரமடைந்து, சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவரான 42 வயது நபர், மற்றொரு சைக்கிள் ஓட்டுநர் 63 வயது நபரை தாக்கி கீழே தள்ளியுள்ளார்.
இதன்போது, அந்நபர், தரையில் விழுந்துள்ள நிலையில், காயத்திற்குள்ளாகிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும், குறித்த நபர், உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் 42 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |