கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாதி ! சந்தேகநபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அரநாயக்க வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதிவான் நீதிமன்றம் நேற்று இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரநாயக்க, நிக்கபிட்டிய பகுதியைச் சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் 33 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
இச்சம்பவத்தில் அரநாயக்க வைத்தியசாலையில் பணிபுரிந்த 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற தாதியே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி தெரியவருவதாவது, உயிரிழந்த பெண் தனது கணவரைப் பிரிந்து, ஏழு வயதுடைய மகனுடன் தீப்பிட்டிய பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.
இதன்போது, சந்தேகநபருடன் அவர் தகாத உறவைப் பேணி வந்தார் என்று கூறப்படுகின்றது.நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிய தாதி, சந்தேகநபர் தனது வீட்டுக்குள் இருப்பதைக் கண்டு அச்சமடைந்து, உடனடியாக அருகிலுள்ள வீட்டுக்குத் தப்பியோடியுள்ளார்.
இதன்போது அவரை துரத்திச்சென்ற சந்தேகநபர், அண்டை வீட்டு வாசலில் வைத்து அவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை அறிக்கை
தர்க்கம் முற்றிய நிலையில், சந்தேகநபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாதியின் நெஞ்சுப்பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
படுகாயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பாக அரநாயக்க பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் சந்தேகநபர் அன்றிரவே கைது செய்யப்பட்டார்.
நேற்று திங்கட்கிழமை மதியம் மாவனல்லை பதில் நீதிவான் நிஷேதா குமாரி கருணாதிலக்க சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.
உயிரிழந்த தாதியின் சடலத்தைக் கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து, உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam