கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாதி ! சந்தேகநபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Sri Lanka Police Kegalle Sri Lanka Police Investigation
By Rakesh Mar 03, 2026 09:03 AM GMT
Report

அரநாயக்க வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதிவான் நீதிமன்றம் நேற்று இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரநாயக்க, நிக்கபிட்டிய பகுதியைச் சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் 33 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நடுவீதியில் கை,கால்கள் ஒன்றாக கட்டப்பட்டு இளைஞர் கொலை!

நடுவீதியில் கை,கால்கள் ஒன்றாக கட்டப்பட்டு இளைஞர் கொலை!

விளக்கமறியல் உத்தரவு

இச்சம்பவத்தில் அரநாயக்க வைத்தியசாலையில் பணிபுரிந்த 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற தாதியே உயிரிழந்துள்ளார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாதி ! சந்தேகநபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Nurse Brutally Murdered Court Order

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி தெரியவருவதாவது, உயிரிழந்த பெண் தனது கணவரைப் பிரிந்து, ஏழு வயதுடைய மகனுடன் தீப்பிட்டிய பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.

இதன்போது, சந்தேகநபருடன் அவர் தகாத உறவைப் பேணி வந்தார் என்று கூறப்படுகின்றது.நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிய தாதி, சந்தேகநபர் தனது வீட்டுக்குள் இருப்பதைக் கண்டு அச்சமடைந்து, உடனடியாக அருகிலுள்ள வீட்டுக்குத் தப்பியோடியுள்ளார்.

இதன்போது அவரை துரத்திச்சென்ற சந்தேகநபர், அண்டை வீட்டு வாசலில் வைத்து அவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை அறிக்கை

தர்க்கம் முற்றிய நிலையில், சந்தேகநபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாதியின் நெஞ்சுப்பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

படுகாயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாதி ! சந்தேகநபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Nurse Brutally Murdered Court Order

சம்பவம் தொடர்பாக அரநாயக்க பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் சந்தேகநபர் அன்றிரவே கைது செய்யப்பட்டார்.

நேற்று திங்கட்கிழமை மதியம் மாவனல்லை பதில் நீதிவான் நிஷேதா குமாரி கருணாதிலக்க சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

உயிரிழந்த தாதியின் சடலத்தைக் கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து, உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார். 

சர்வதேசத்தில் ஏற்பட்ட பெரும் பயண குழப்பம்! பரபரப்புக்கு மத்தியில்149 பயணிகளுடன் வந்திறங்கிய விமானம்

சர்வதேசத்தில் ஏற்பட்ட பெரும் பயண குழப்பம்! பரபரப்புக்கு மத்தியில்149 பயணிகளுடன் வந்திறங்கிய விமானம்

கோட்டாய ஆட்சி போன்று அநுர ஆட்சியிலும் தொடரும் மரணம் - நீண்ட வரிசையில் காத்திருந்தவரின் நிலை

கோட்டாய ஆட்சி போன்று அநுர ஆட்சியிலும் தொடரும் மரணம் - நீண்ட வரிசையில் காத்திருந்தவரின் நிலை

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US