அநுர அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தவில்லை! அமைச்சர் லால்காந்த
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் அவசரகாலச் சட்டம் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஊடகங்களை அடக்கி ஆளவும் முற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், "பேரிடருக்குப் பின்னரே நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மக்களுக்கு சேவை
மக்களுக்கு சேவையாற்றுவதற்குத் தடையாக உள்ள காரணிகளை நிவர்த்தி செய்வதற்காகவே அந்தச் சட்டம் வந்தது.

எனவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனைத் தவறாக எமது அரசு பயன்படுத்தவில்லை. கடந்த ஆட்சிக் காலங்களில் தான் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டன.
எம் மீது ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்தால் கூட அவை பற்றி நாம் கவலை அடையமாட்டோம். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.